மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 192
“கலைவாணி”

கலைவாணித்தாயே! அறிவெனும் கல்விக்கு அன்னையவள் நீயே!
ஊளமார உனைத் தொழுவோரைக் காப்பவள் நீயே!
வளந்தரும் செல்வம்,அஞ்சாத வீரம் இருந்தும் பயனுண்டோதாயே?
நிறைமதி கல்வியூட்டி அனைத்தையும் அழியாது காப்பவள் நீயே!

ஆய கலைகள் அனைத்தையும் உனை உறுதியாய் நம்பினோர்க்கு எளிதாக உணர்விக்கும் தாயே!
பளிங்குருவாய் உள்ளத்தில் நீயமர்ந்தால் இடர் எதுவும் அண்டாது அன்னையே!
நவராத்திரி ஒன்பதுநாள் இறுதியிலே உனைப்போற்றி விரதமதை முடிப்பார்கள் தாயே!
கல்வியா,செல்வமா,விரமா உயர்ந்தது எனும் அறியாமை
போக்கி உண்மையை உணர்துபவள் நீயே தாயே!
காத்தல் தொழிலைக் கச்சிதமாய் முடிக்கும் திருமால் ஆங்கே
உலகில் காத்திடும் பெண் தெய்வம் என உயர்ந்தவள் நீயன்றோ ?
வெள்ளைப்பணிபூண்டு வெண்டாமரையில் வீற்றிருந்து வீணை இசைக்கும் அற்புத அரசி கலைவாணியே!
உனை தொழுவோர் நலம் பெற வைக்கும் அருட்கொடை நீயம்மா!
வாழும்வரை உனை மறவோம்,எமைக்காத்திடுவாய்! யாவையும் எமக்களித்து எமை வாழவைப்பாய் வாணி அம்மா!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading