கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 193

“ஒன்று பட்டு”

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு
சிறு அலகு குடும்பம் தன்னில் ஒற்றுமை குலைந்தால்
அவனியில் எங்கனம் ஆகும் உயர்வு?
இனமத மொழியால் வேறுபட்டோம் நாம் அனைவரும் ஒருதாயின் மக்களன்றோ?

மனிதன் என்பவன் ஒரு சமூகப்பிராணி! அவன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
ஐந்தறிவேயுள்ள பிராணியைப்பார்,
ஒழுங்கு கட்டுப்பாடு ஒற்றுமை பேணி உயர்வாய் வாழ்வது அதிசயமன்றோ?

ஆறறிவு படைத்தும் உன் ஆணவம் சுயநலம் உன்கடமை உணர்வை மழுங்கடிக்குதோ?
தனியொருவன் முன்னேற்றம் குடும்ப சமூக தேசியத்தின் உயர்வன்றோ?
நீ திருந்தி உலகம் உய்வது என்று உண்மையாகுமோ?
உள்ளத்தால் பொய்யாது ஒழுகக் கற்றுக்கொள்.
உலகம் உன்னை மதிக்கும் ஒன்றுபட்டு உயரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading