மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 236

“குழலோசை”

மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை
ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை
வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை
மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை

ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த அதிசய குழலோசை
ஆநிரைகள் மெய்மறந்து அதிக பால் சுரந்த அற்புத ஓசை
எம்காதில்பாய்ந்து கடமைகளை ஒழுங்கமைக்கும் குழலோசை
ஆலை,தொழிற்சாலை கூவி அழைக்கும் குழலோசை

ஆனந்தமாய் ஆரம்பித்து மரணபயமூட்டும் குழலோசை
பீரங்கி துப்பாக்கி வெடியோசை தந்திடுமே அவல ஓசை
ஆண்டவனை வேண்டி உயிர்பிழைக்கும் ஓர் நப்பாசை
காற்றில்லா நிலையில் நிலையில்லா குழலோசை!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading