பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 236

“குழலோசை”

மூங்கில் எமக்களித்த புல்லாங் குழலோசை
ஏங்கித்தவிக்க வைக்கும் பரவசஓசை
வேய்ங்குழலோசை மீண்டும்கேட்க மனதிலாசை
மயங்காதவரையும் மயக்கும் இனிய குழலோசை

ஆயர்பாடி கேட்டு மகிழ்ந்த அதிசய குழலோசை
ஆநிரைகள் மெய்மறந்து அதிக பால் சுரந்த அற்புத ஓசை
எம்காதில்பாய்ந்து கடமைகளை ஒழுங்கமைக்கும் குழலோசை
ஆலை,தொழிற்சாலை கூவி அழைக்கும் குழலோசை

ஆனந்தமாய் ஆரம்பித்து மரணபயமூட்டும் குழலோசை
பீரங்கி துப்பாக்கி வெடியோசை தந்திடுமே அவல ஓசை
ஆண்டவனை வேண்டி உயிர்பிழைக்கும் ஓர் நப்பாசை
காற்றில்லா நிலையில் நிலையில்லா குழலோசை!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan