“செல்லாக்காசு”

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு

புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு

பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய பணத்துக்கு
வந்ததே நெரிசல்

வங்கியில் மாற்றாமல்
வீதியில் கொட்டியும்
வரிசையாய் கட்டும்
செல்லாக்காசு ஆனதே

மானிடரின் பேச்சு
மதிப்பற்று போவதும்
செல்லாத காசுக்கும்
ஒப்புவமை ஆனதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading