புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-14

24-08-2023

என்று தீரும்…

ஆண்டுகள் பலவாகி
ஆறாத வலியாகி
வேண்டிய தீர்வைத்
தருவார் யார் எமக்கு?

வீட்டிற்குள்ளே புதைந்து
போன குடும்பங்களும்
ஆற்றுக்குள்ளே அடங்கிப்
போன உறவுகளும்

மண்ணுக்குள் விதைக்கப்பட்ட
மாவீரச் செல்வத்தின்,
தமிழீழத் தாகத்தின்
நீங்காத மூச்சுக்களும்

மறைக்கப்பட்ட பல உறவு
இறைக்கப்பட்ட நீராச்சு
சொல்லவொணா சோகங்கள்
சொல்லிக் கொண்டு போகலாம்.

பஞ்சுமெத்தை கட்டிலிலே படுத்துறங்கினாலும்
நெஞ்சுக்குள்ளே நெருடுதிங்கே
அங்காங்கே வலிகள்!

என்று தீரும் இன்று தீரும்
வெம்பி நின்றிராமல்
விட்ட காலம் இனியும் நீண்டுடாமல்
நின்று திரும்பிப் பார்ப்போமே!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading