மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-34
30-04-2024

அழகு

அணையாத அடுப்பெரிய
அள்ளி வழங்கும் கொடை அழகு
உரிமையோடு உறவு பேசும்
நெஞ்சம் மிஞ்சும் அழகு!

முதுமைக்குள் ஒளிந்திருக்கும்
இளமை மெல்ல அழகு
மொத்தமாய்க் காத்தெடுத்தால்
முதியோர் இல்லம் குறைவு!

வறுமையும் பஞ்சமும்
எம் மண்ணில் வேண்டாமிங்கு
வாஞ்சையோடு இளம் சந்ததி
கோட் சூட் விவசாயமுமிங்கு!

இயற்கை உணவு பகிர்ந்துவிட்டால்
இல்லமெல்லாம் அழகு
இக்கனவு நனவானால்
இதுவே பேரழகு!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading