” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-34
30-04-2024

அழகு

அணையாத அடுப்பெரிய
அள்ளி வழங்கும் கொடை அழகு
உரிமையோடு உறவு பேசும்
நெஞ்சம் மிஞ்சும் அழகு!

முதுமைக்குள் ஒளிந்திருக்கும்
இளமை மெல்ல அழகு
மொத்தமாய்க் காத்தெடுத்தால்
முதியோர் இல்லம் குறைவு!

வறுமையும் பஞ்சமும்
எம் மண்ணில் வேண்டாமிங்கு
வாஞ்சையோடு இளம் சந்ததி
கோட் சூட் விவசாயமுமிங்கு!

இயற்கை உணவு பகிர்ந்துவிட்டால்
இல்லமெல்லாம் அழகு
இக்கனவு நனவானால்
இதுவே பேரழகு!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan