மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெயம் தங்கராசா

சசிச

முள்ளிவாய்க்கால்

புனிதம் தூங்கி விழிக்காது போனது
மனிதம் மனதில் வறண்டு போனது
இரக்கம் இன்றி இருதயம் துடித்தது
வரலாற்று கொடுமை நிகழ்ந்து முடிந்தது

உலகம் இப்படித்தான் என்பது தெரிந்தது
நிலத்தின் நிறம் சிவப்பையும் மீறியது
பிறந்த மண் சுடுகாடாக மாறியது
திறந்திடாது கண்களை அகிலம் தூங்கியது

தேகங்கள் துடித்து விழுந்து மாண்டன
சோகம் விழிகளில் கண்ணீராய் கொட்டின
முள்ளிவாய்க்காலில் இனமொன்று வாழ்வு பட்டது
தள்ளிவைக்கும் குலமென பூமி கைவிட்டது

ஜெயம்
22-05-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading