ஜெயம் தங்கராஜா

சசிச

பசுமை

பூமி மேலே கானும் காட்சி
சாமி அவரின் படைப்பின் மாட்சி

பசுமை நிறைந்து வழிந்து ஒழுகும்
பசித்த விழிகள் உண்டு மகிழும்

பச்சை போர்வை போர்க்கும் மரங்கள்
உச்சபட்சமாக வானம் கொடுத்த வரங்கள்

மலையில் பிறந்து நதியும் ஊரும்
விளையும் பயிரால் உவகையில் ஊரும்

அலைந்து அலையும் முத்தமிடும் கரையும்
அளைந்திட ஆனந்தம் விட்டுப்போன நுரையும்

பூத்துக் குலுங்கும் பூக்களின் அழகும்
பார்த்துவிட்டாலே சந்தோசம் மனதுடன் பழகும்

இயற்கை என்பது இறைவனின் பரிசு
சுயமாய் சிந்திப்பின் கொடைகளில் பெரிசு

பசித்தவர் புசிக்கின்றார் பசுமையின் அருளே
ருசித்தவர் பாராட்டிவிடும் ஆளுமையின் பொருளே

திரண்டிருக்கும் வளங்களை பொதுவாக எண்ணுவோம்
உரமாக்கி உழைப்புதனை ஊரோடு உண்ணுவோம்

அகமும் புறமும் பேணட்டும் உண்மையை
ஜெகத்தில் உயிரினங்கள் காணட்டும் நன்மையை

ஜெயம்
24-06-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading