03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
பசுமை
பூமி மேலே கானும் காட்சி
சாமி அவரின் படைப்பின் மாட்சி
பசுமை நிறைந்து வழிந்து ஒழுகும்
பசித்த விழிகள் உண்டு மகிழும்
பச்சை போர்வை போர்க்கும் மரங்கள்
உச்சபட்சமாக வானம் கொடுத்த வரங்கள்
மலையில் பிறந்து நதியும் ஊரும்
விளையும் பயிரால் உவகையில் ஊரும்
அலைந்து அலையும் முத்தமிடும் கரையும்
அளைந்திட ஆனந்தம் விட்டுப்போன நுரையும்
பூத்துக் குலுங்கும் பூக்களின் அழகும்
பார்த்துவிட்டாலே சந்தோசம் மனதுடன் பழகும்
இயற்கை என்பது இறைவனின் பரிசு
சுயமாய் சிந்திப்பின் கொடைகளில் பெரிசு
பசித்தவர் புசிக்கின்றார் பசுமையின் அருளே
ருசித்தவர் பாராட்டிவிடும் ஆளுமையின் பொருளே
திரண்டிருக்கும் வளங்களை பொதுவாக எண்ணுவோம்
உரமாக்கி உழைப்புதனை ஊரோடு உண்ணுவோம்
அகமும் புறமும் பேணட்டும் உண்மையை
ஜெகத்தில் உயிரினங்கள் காணட்டும் நன்மையை
ஜெயம்
24-06-2023

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...