தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பசுமை

பூமி மேலே கானும் காட்சி
சாமி அவரின் படைப்பின் மாட்சி

பசுமை நிறைந்து வழிந்து ஒழுகும்
பசித்த விழிகள் உண்டு மகிழும்

பச்சை போர்வை போர்க்கும் மரங்கள்
உச்சபட்சமாக வானம் கொடுத்த வரங்கள்

மலையில் பிறந்து நதியும் ஊரும்
விளையும் பயிரால் உவகையில் ஊரும்

அலைந்து அலையும் முத்தமிடும் கரையும்
அளைந்திட ஆனந்தம் விட்டுப்போன நுரையும்

பூத்துக் குலுங்கும் பூக்களின் அழகும்
பார்த்துவிட்டாலே சந்தோசம் மனதுடன் பழகும்

இயற்கை என்பது இறைவனின் பரிசு
சுயமாய் சிந்திப்பின் கொடைகளில் பெரிசு

பசித்தவர் புசிக்கின்றார் பசுமையின் அருளே
ருசித்தவர் பாராட்டிவிடும் ஆளுமையின் பொருளே

திரண்டிருக்கும் வளங்களை பொதுவாக எண்ணுவோம்
உரமாக்கி உழைப்புதனை ஊரோடு உண்ணுவோம்

அகமும் புறமும் பேணட்டும் உண்மையை
ஜெகத்தில் உயிரினங்கள் காணட்டும் நன்மையை

ஜெயம்
24-06-2023

Nada Mohan
Author: Nada Mohan