மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

மாவீரரே

நெருப்பு மழைக்குள் குளித்தவர்
இருட்டுக்கும் பயத்தைக் காட்டியவர்
சீவனை மொழியாக நினைத்தவர்
சாவினை விரும்பி அணைத்தவர்

கந்தகக் காற்றை சுவாசித்தார்
சந்ததிக்காகவே உயிரை நீத்தார்
வரலாறு படைத்த மாவீரரே
பெருமைகள் எந்நாளும் நினைவாளுமே

மண்ணைக் காக்கவென போராடினீர்
தன்னை உவந்தே காணிக்கையாக்கினீர்
உங்களைப்போன்று பார்த்ததில்லை உலகில்
தங்கங்களே இன்றுமெங்கள் கனவில்

இலட்சியம் நிச்சயம் வெல்லும்
நிலமதை ஒருநாள் அடைந்துகொள்ளும்
மறவர்களின் பெயர்களன்று உச்சரிக்கப்படும்
சிறப்பானவர்களின் வரலாறு மெச்சப்படும்

ஜெயம்
31-11-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading