ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

மாவீரரே

நெருப்பு மழைக்குள் குளித்தவர்
இருட்டுக்கும் பயத்தைக் காட்டியவர்
சீவனை மொழியாக நினைத்தவர்
சாவினை விரும்பி அணைத்தவர்

கந்தகக் காற்றை சுவாசித்தார்
சந்ததிக்காகவே உயிரை நீத்தார்
வரலாறு படைத்த மாவீரரே
பெருமைகள் எந்நாளும் நினைவாளுமே

மண்ணைக் காக்கவென போராடினீர்
தன்னை உவந்தே காணிக்கையாக்கினீர்
உங்களைப்போன்று பார்த்ததில்லை உலகில்
தங்கங்களே இன்றுமெங்கள் கனவில்

இலட்சியம் நிச்சயம் வெல்லும்
நிலமதை ஒருநாள் அடைந்துகொள்ளும்
மறவர்களின் பெயர்களன்று உச்சரிக்கப்படும்
சிறப்பானவர்களின் வரலாறு மெச்சப்படும்

ஜெயம்
31-11-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading