சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மாசி

பனியை பொழியாது பணிசெய்ய வாராய்
இனியும் குளிர்வேண்டாம் வெப்பத்தை தாராய்
எங்கோ ஒளிந்த பறவைகளும் வெளியே வந்து
எங்க மாசியென பாடிடுதே சிந்து

மெல்லனவே இருளகற்றி ஓளிர்ந்துவிடும் மாதம்
உள்ளத்துள்ளே குதூகலம் வந்துவந்து மோதும்
மேகம்விட்டு ஆதவனும் எட்டிப்பார்க்கும் நேரம்
தேகம்விட்டு சோம்பலதும் விடைபெற்றே ஓடும்

இறந்த மாதம் சென்றது தந்தே
பிறக்கும் மாதமும் தாராதோ வந்தே
மாசில்லா மகிழ்ச்சியது வாழ்க்கையிலே நுழையும்
மாசிவர கட்டவிழ்த்து கவலைகளும் கலையும்

ஜெயம்
29-01-2023

Nada Mohan
Author: Nada Mohan