புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெயம் தங்கராஜா

பகலவன்

பயிரினை ஆக்கி உயிரினைக் காக்கும் மூலம்
ஒழியுமே இருளும் வெளிச்சத்தின் அருளும் சூழும்
மரங்கள் எங்கெங்கோ வரங்கள் அங்கங்கு கொடுப்பு
சூரியன் எழுச்சி பாரின் வளர்ச்சிக்கு எடுப்பு

தூக்கத்தால் எழுப்பி ஊக்கத்தை நுழைக்கும் செங்கதிரே
தற்காலிக ஒளியால் உற்சாகத்தை பொழிந்திடும் புதிரே
தோன்றுவது மறைவது ஆண்டாண்டாய்ப் பறைவதும் பொய்யே
சுழல்கிற தரையாலே விழுகின்ற திரையது மெய்யே

அடிவானில் வழியும் குடிகொள்ளும் எழிலின் காட்சி
முந்தியும் அழகு அந்தியும் அழகின் ஆட்சி
அண்ட வெளியில் உண்டு ஒளியை நிலவும்
கையகம் கொண்டதை வையகம் கொட்டியே உலவும்

நெருப்பான நட்ச்சத்திரம் அரும்பெரும் நட்ச்சத்திரம் என்பதும்
பேதமற்றது தருவதற்கு சேதமின்றியே உருளுது ஒன்பதும்
வெளிச்சத்தை உலகிற்கும் வெளி சத்தை உடலுக்கும்
தந்திடவே கிழக்கில் உதிக்கின்ற விளக்கே பகலவன்

ஜெயம்
04-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading