சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

தொழிலாளி

அயராது அல்லும் பகலுமாய் உழைத்து
வியர்வை மழையில் அன்றாடங் குளித்து
தன்தோளிலே உலகைச் சுமப்பவன் தொழிலாளி
மண்தேசத்தை கட்டி ஆளும் முதலாளி

மண்ணைத் தோண்டி பொன்னை எடுத்தான்
விண்ணை முட்டும்  கட்டிடம் தொடுத்தான்
உண்டாக்கி அன்னத்தை பஞ்சத்தை ஒழித்தான்
உன்னையும் என்னையும் உயர்த்திட இளைத்தான்

இல்லாமை என்பதும் அவனாலே  இங்கில்லை
எல்லாமும் அவனாலே விண்ணிறைவன் தன்பிள்ளை
பாடுபட்டு உழைப்பைக் கொடுத்திடும் கரங்கள்
நாடுகளிற்கெலாம் தொழிலாளிகள் கிடைத்திட்ட வரங்கள்

செய்யும் தொழிலை தெய்வமாக்கிடும் பாட்டாளி
மெய்யிலுமவனே வாழ்க்கைக்கு உதவும் கூட்டாளி
மேதினத்தில் அவர் பெருமைகளைக் கூறுவார்
மேதினியில் அவனின்றி யார் பசியாறுவார்

ஜெயம்
28-05-2022

Nada Mohan
Author: Nada Mohan