“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பருவம்

சந்தோசத்தை கவலைகளின்றி கொண்டாடிய பருவம்
கொஞ்சுகின்ற அழகோடு உலாவுகின்ற உருவம்
சிந்திவிடும் சிரிப்பிலங்கே உயிருங்கூட உருகும்
சித்திரமோ நித்திலமோ நிம்மதியும் பெருகும்

பூவெனவே தேகமென சின்னஞ்சிறு உலகம்
தூக்கிக்கொண்டு அணைத்துவிட கவலைகளும் விலகும்
அழகென்றால் அழகன்றோ குழந்தைகளின் வடிவம்
நிலவுங்கூட கீழிறங்கி விளையாடவே துடிக்கும்

குழந்தைப் பருவமது வாழ்க்கையதன் அன்பளிப்பு
மலர்ந்து வாடுமுன்பே வனப்பான துளிர்ப்பு
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கள்ளமில்லாச் சிரிப்பு
இல்லாமை அகற்றிவிடும் மண்ணுலகின் சிறப்பு

மென்மைப் பருவமது பூவினது தன்மை
உண்மை உருவமது உள்ளமோ வெண்மை
குழந்தையாக இருக்குமட்டும் இல்லையொரு துன்பம்
வளர்ந்தபின்பு தேடுகின்றேன் எங்கேயந்த இன்பம்

ஜெயம்
17-08-2024

Nada Mohan
Author: Nada Mohan