” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பருவம்

சந்தோசத்தை கவலைகளின்றி கொண்டாடிய பருவம்
கொஞ்சுகின்ற அழகோடு உலாவுகின்ற உருவம்
சிந்திவிடும் சிரிப்பிலங்கே உயிருங்கூட உருகும்
சித்திரமோ நித்திலமோ நிம்மதியும் பெருகும்

பூவெனவே தேகமென சின்னஞ்சிறு உலகம்
தூக்கிக்கொண்டு அணைத்துவிட கவலைகளும் விலகும்
அழகென்றால் அழகன்றோ குழந்தைகளின் வடிவம்
நிலவுங்கூட கீழிறங்கி விளையாடவே துடிக்கும்

குழந்தைப் பருவமது வாழ்க்கையதன் அன்பளிப்பு
மலர்ந்து வாடுமுன்பே வனப்பான துளிர்ப்பு
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் கள்ளமில்லாச் சிரிப்பு
இல்லாமை அகற்றிவிடும் மண்ணுலகின் சிறப்பு

மென்மைப் பருவமது பூவினது தன்மை
உண்மை உருவமது உள்ளமோ வெண்மை
குழந்தையாக இருக்குமட்டும் இல்லையொரு துன்பம்
வளர்ந்தபின்பு தேடுகின்றேன் எங்கேயந்த இன்பம்

ஜெயம்
17-08-2024

Nada Mohan
Author: Nada Mohan