திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

இதயம்

எதையும் தாங்கும் இதயம் எனக்கு
சிதையும் என்று போடாதே தப்புக்கணக்கு
பின்னால் இருந்து துரோகஞ்செய்யும் கோழையே
முன்னால் வந்தால் ஒட்டநறுக்குவேன் வாலையே

நண்பனென நினைத்து பழகியதெல்லாம் பாவம்
உண்மையில்லா சொந்தமென கிடைத்திட்ட சாபம்
புண்பட மனதினை வைப்பதிலென்ன இலாபம்
அன்பை எதிர்பார்த்து அடைந்துகொண்டேன் சோகம்

முதுகில் குத்தாதே முகத்தில் அறைந்துவிடு
பதுங்கியிருந்து பழி தீர்ப்பதை மறந்துவிடு
நிசமென நினைத்தேன் போலியான உன்னை
விசங்கொண்ட பாம்பாகி தீண்டுவதேன் என்னை

கரும்பாக இனித்தது ஏன்தான் கசந்ததோ
விரும்பியுண்ட தேனதும் எதற்காக புளித்ததோ
மனம்விட்டு பேசாது ஓடியோடி மறைவதுமேன்
உனக்காக உயிர்கொடுப்பேன் என்பதை மறந்ததுமேன்

ஆத்திரத்தில் நானும் வார்த்தைகளை விட்டுவிட்டேன்
ஈற்றினிலே அதை நினைத்து பெருங்கவலைப்பட்டேன்
பிரிவென்பது நட்புக்கு முதல் எதிரி
புரிந்திடின் உருகி வெளிச்சந்தரும் மெழுகுதிரி

கஷ்டப்பட்டும் மனதாலே இல்லையென சொல்கின்றேன்
இஷ்டப்பட்ட உறவிழந்து பாதைமாறி செல்கின்றேன்
தற்காலிக தோழமையென நானிதை நினைக்கவில்லை
குற்றமிருப்பின் மன்னித்து வந்துவிடு நட்பினெல்லை

ஜெயம்
11-12-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading