மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 598

பெண்ணில்லா மண்ணா

இறைவனை போன்றதொரு உண்மை
குறையில்லா நிறைவதன் தன்மை
பூத்திடும் பூக்களின் மென்மை
காத்திடும் உன்னதம் பெண்மை

பிறந்திட்ட பிறப்பதில் பரிபூரணம்
சிறந்தநல் வாழ்க்கைக்கு காரணம்
அன்பிற்கும் பரிவிற்கும் ஓரினம்
பெண்ணே உயர்வான உயிரினம்

பொன்னென்றும் பூவென்றும் அழைப்பார்
கண்ணென்றும் கவிக்குள்ளே நுழைப்பார்
எண்ணில்லா கவிஞரும் பிழைப்பார்
எண்ணங்கள் மோதியே களைப்பார்

படைப்புக்களில் பெண் விசித்திரம்
நடமாடும் படிக்கவேண்டிய சரித்திரம்
உயிர்களெல்லாம் அவளிடம் தஞ்சம்
உயர்வானதென்றும் பதுமையர் நெஞ்சம்

ஜெயம்
16-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading