வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 598

பெண்ணில்லா மண்ணா

இறைவனை போன்றதொரு உண்மை
குறையில்லா நிறைவதன் தன்மை
பூத்திடும் பூக்களின் மென்மை
காத்திடும் உன்னதம் பெண்மை

பிறந்திட்ட பிறப்பதில் பரிபூரணம்
சிறந்தநல் வாழ்க்கைக்கு காரணம்
அன்பிற்கும் பரிவிற்கும் ஓரினம்
பெண்ணே உயர்வான உயிரினம்

பொன்னென்றும் பூவென்றும் அழைப்பார்
கண்ணென்றும் கவிக்குள்ளே நுழைப்பார்
எண்ணில்லா கவிஞரும் பிழைப்பார்
எண்ணங்கள் மோதியே களைப்பார்

படைப்புக்களில் பெண் விசித்திரம்
நடமாடும் படிக்கவேண்டிய சரித்திரம்
உயிர்களெல்லாம் அவளிடம் தஞ்சம்
உயர்வானதென்றும் பதுமையர் நெஞ்சம்

ஜெயம்
16-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading