ஜெயம் தங்கராஜா

கவி 598

பெண்ணில்லா மண்ணா

இறைவனை போன்றதொரு உண்மை
குறையில்லா நிறைவதன் தன்மை
பூத்திடும் பூக்களின் மென்மை
காத்திடும் உன்னதம் பெண்மை

பிறந்திட்ட பிறப்பதில் பரிபூரணம்
சிறந்தநல் வாழ்க்கைக்கு காரணம்
அன்பிற்கும் பரிவிற்கும் ஓரினம்
பெண்ணே உயர்வான உயிரினம்

பொன்னென்றும் பூவென்றும் அழைப்பார்
கண்ணென்றும் கவிக்குள்ளே நுழைப்பார்
எண்ணில்லா கவிஞரும் பிழைப்பார்
எண்ணங்கள் மோதியே களைப்பார்

படைப்புக்களில் பெண் விசித்திரம்
நடமாடும் படிக்கவேண்டிய சரித்திரம்
உயிர்களெல்லாம் அவளிடம் தஞ்சம்
உயர்வானதென்றும் பதுமையர் நெஞ்சம்

ஜெயம்
16-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading