ஜெயம் தங்கராஜா

இதுதான் வாழ்க்கை

மனிதத்தை மனதினால் பிழிந்து
புனிதத்தை செயலினில் பொழிந்து
வாழ்க்கையை வாழ்ந்திடின் நன்மை
வாழ்த்துவார் இறைவனும் உண்மை

உலகமது ஆண்டவன் வீடு
அழகான மண்தேசம் பாரு
விளைகின்ற நொடியெல்லாம் பொன்னாகுமே
முளைக்கின்ற விதைதாங்கும் மண்ணாகுமே

பாசத்தை தரிக்கின்ற களமல்லவா
நேசத்துள் கரைகின்ற நிலமல்லவா
பந்தமே பாரின் எண்திக்கும்
சொந்தமாய்ப் பாரின் அது சொர்க்கம்

இருப்பதோ கொஞ்சக் காலம்
கரைந்திடும் மண்ணின் கோலம்
இதுவரை எப்படியோ இருக்கட்டும்
புதுநாட்கள் நற்செயலால் சிறக்கட்டும்

ஜெயம்
16/08/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading