மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

இதுதான் வாழ்க்கை

மனிதத்தை மனதினால் பிழிந்து
புனிதத்தை செயலினில் பொழிந்து
வாழ்க்கையை வாழ்ந்திடின் நன்மை
வாழ்த்துவார் இறைவனும் உண்மை

உலகமது ஆண்டவன் வீடு
அழகான மண்தேசம் பாரு
விளைகின்ற நொடியெல்லாம் பொன்னாகுமே
முளைக்கின்ற விதைதாங்கும் மண்ணாகுமே

பாசத்தை தரிக்கின்ற களமல்லவா
நேசத்துள் கரைகின்ற நிலமல்லவா
பந்தமே பாரின் எண்திக்கும்
சொந்தமாய்ப் பாரின் அது சொர்க்கம்

இருப்பதோ கொஞ்சக் காலம்
கரைந்திடும் மண்ணின் கோலம்
இதுவரை எப்படியோ இருக்கட்டும்
புதுநாட்கள் நற்செயலால் சிறக்கட்டும்

ஜெயம்
16/08/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading