ஜெயம் தங்கராஜா

சசிச

மார்கழி

பார் களிக்க வந்தததொரு மாதம்
மார்கழி மாதமது மாதங்களுள் பிரமாதம்
காரிருள்  குவலயத்தை போர்த்துக்கொள்ளும் போதும்
பூரிப்பிலே வந்திடாது கடுகளவும் சேதம்

வருடக் கடைசியில் வழியனுப்ப வந்ததே
கருமை நிறைத்தாலும் அருமையினைத் தந்ததே
பருவநிலை தானடைய வெண்பனியும் பூத்ததே
சிறுவர்களின் உள்ளங்களில் தேன்துளியைச் சேர்த்ததே

இருபத்தைந்தில் கொண்டாடவே இயேசுபாலன் பிறப்பு
உருகிவிடும் பனிநடுவில் நிகழுமந்த சிறப்பு
பெருமைமிகு திருநாளைக் கொண்டதான இருப்பு
அருமையான மாதமென மார்கழிக்கான குறிப்பு

இரும்பும் நடுங்கிவிடும் குளிர்காற்றும் வீசும்
சுருங்கிக்கொண்ட சூரியனால் சீதளம் கதைபேசும்
இருந்தாலும் ஆண்டினிறுதியில் உறுதியின் மாசம்
தருகின்ற நன்மைகளால் பொங்கிவிடும் மனத்தேசம்

ஜெயம்
04-12-2022
https://linksharing.samsungcloud.com/sMWuTgEViLZH

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading