கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மார்கழி

பார் களிக்க வந்தததொரு மாதம்
மார்கழி மாதமது மாதங்களுள் பிரமாதம்
காரிருள்  குவலயத்தை போர்த்துக்கொள்ளும் போதும்
பூரிப்பிலே வந்திடாது கடுகளவும் சேதம்

வருடக் கடைசியில் வழியனுப்ப வந்ததே
கருமை நிறைத்தாலும் அருமையினைத் தந்ததே
பருவநிலை தானடைய வெண்பனியும் பூத்ததே
சிறுவர்களின் உள்ளங்களில் தேன்துளியைச் சேர்த்ததே

இருபத்தைந்தில் கொண்டாடவே இயேசுபாலன் பிறப்பு
உருகிவிடும் பனிநடுவில் நிகழுமந்த சிறப்பு
பெருமைமிகு திருநாளைக் கொண்டதான இருப்பு
அருமையான மாதமென மார்கழிக்கான குறிப்பு

இரும்பும் நடுங்கிவிடும் குளிர்காற்றும் வீசும்
சுருங்கிக்கொண்ட சூரியனால் சீதளம் கதைபேசும்
இருந்தாலும் ஆண்டினிறுதியில் உறுதியின் மாசம்
தருகின்ற நன்மைகளால் பொங்கிவிடும் மனத்தேசம்

ஜெயம்
04-12-2022
https://linksharing.samsungcloud.com/sMWuTgEViLZH

Nada Mohan
Author: Nada Mohan