” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

மார்கழி

பார் களிக்க வந்தததொரு மாதம்
மார்கழி மாதமது மாதங்களுள் பிரமாதம்
காரிருள்  குவலயத்தை போர்த்துக்கொள்ளும் போதும்
பூரிப்பிலே வந்திடாது கடுகளவும் சேதம்

வருடக் கடைசியில் வழியனுப்ப வந்ததே
கருமை நிறைத்தாலும் அருமையினைத் தந்ததே
பருவநிலை தானடைய வெண்பனியும் பூத்ததே
சிறுவர்களின் உள்ளங்களில் தேன்துளியைச் சேர்த்ததே

இருபத்தைந்தில் கொண்டாடவே இயேசுபாலன் பிறப்பு
உருகிவிடும் பனிநடுவில் நிகழுமந்த சிறப்பு
பெருமைமிகு திருநாளைக் கொண்டதான இருப்பு
அருமையான மாதமென மார்கழிக்கான குறிப்பு

இரும்பும் நடுங்கிவிடும் குளிர்காற்றும் வீசும்
சுருங்கிக்கொண்ட சூரியனால் சீதளம் கதைபேசும்
இருந்தாலும் ஆண்டினிறுதியில் உறுதியின் மாசம்
தருகின்ற நன்மைகளால் பொங்கிவிடும் மனத்தேசம்

ஜெயம்
04-12-2022
https://linksharing.samsungcloud.com/sMWuTgEViLZH

Nada Mohan
Author: Nada Mohan