கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
ஜீவன் ஒன்றானது காதல் என்றானது

பிடித்த உறவொன்று வாழ்க்கைத் துணையாகிவிட
வடிக்கின்றான் கவிகளை கருவும் அவளாகிவிட
துடிப்பை இதயத்தில் எகிற வைத்தவளின்
மடி சாய்ந்து பேச வேண்டுகின்றான்

அரும்பு மீசை துளிர்த்து ஆம்பிளையானதால்
வரம்புமீறி ஆசையில் தத்திக் குதிக்கின்றான்
பருவம் வந்துவிட்டதால் உறவுக்காக அலைகின்றான்
தருணம் பார்க்கின்றான் எப்போதென காதலைக்கூற

உன்னை நினைத்தே வாடுகின்றேன் என்கின்றான்
தன்னை மறுத்தால் பைத்தியமாவதாக புலம்புகின்றான்
கண்ணைப்பார் உன்னுருவம் தெரிகியுமென மன்றாடுகின்றான்
உண்மையாக நேசிக்கிறேன் ஏற்றுக்கொள்ளென யாசிக்கின்றான்

விரியாத இதழ்கள் தேனைச் சொரிந்தன
பரிசாக காதலை அருளினாள் தேன்மொழியாள்
புரிந்துகொண்ட அக்கணத்திலேயே இதயங்கள் இடம்மாறின
தெரிந்திராத புதிய உணர்வங்கு சொர்கங்கட்டியது

அகப்பட்டுக்கொண்டனர் இருவரும் காதல் பிடிக்குள்
நகமும் சதையுமென பிரியாத உண்மையுறவுக்குள்
சுகத்திற்கு இனிமேலும் குறையுந்தான் உளதோ
பகர்ந்த மணமாலையால் சொந்தமும் நிலையென்றானதோ

ஜெயம்
14-02-2023
https://linksharing.samsungcloud.com/gdv4I9XsVQqu

Nada Mohan
Author: Nada Mohan