மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
ஜீவன் ஒன்றானது காதல் என்றானது

பிடித்த உறவொன்று வாழ்க்கைத் துணையாகிவிட
வடிக்கின்றான் கவிகளை கருவும் அவளாகிவிட
துடிப்பை இதயத்தில் எகிற வைத்தவளின்
மடி சாய்ந்து பேச வேண்டுகின்றான்

அரும்பு மீசை துளிர்த்து ஆம்பிளையானதால்
வரம்புமீறி ஆசையில் தத்திக் குதிக்கின்றான்
பருவம் வந்துவிட்டதால் உறவுக்காக அலைகின்றான்
தருணம் பார்க்கின்றான் எப்போதென காதலைக்கூற

உன்னை நினைத்தே வாடுகின்றேன் என்கின்றான்
தன்னை மறுத்தால் பைத்தியமாவதாக புலம்புகின்றான்
கண்ணைப்பார் உன்னுருவம் தெரிகியுமென மன்றாடுகின்றான்
உண்மையாக நேசிக்கிறேன் ஏற்றுக்கொள்ளென யாசிக்கின்றான்

விரியாத இதழ்கள் தேனைச் சொரிந்தன
பரிசாக காதலை அருளினாள் தேன்மொழியாள்
புரிந்துகொண்ட அக்கணத்திலேயே இதயங்கள் இடம்மாறின
தெரிந்திராத புதிய உணர்வங்கு சொர்கங்கட்டியது

அகப்பட்டுக்கொண்டனர் இருவரும் காதல் பிடிக்குள்
நகமும் சதையுமென பிரியாத உண்மையுறவுக்குள்
சுகத்திற்கு இனிமேலும் குறையுந்தான் உளதோ
பகர்ந்த மணமாலையால் சொந்தமும் நிலையென்றானதோ

ஜெயம்
14-02-2023
https://linksharing.samsungcloud.com/gdv4I9XsVQqu

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading