மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஞாலத்தின் கோலம் 744

ஞாலத்தின் கோலம்
செல்வி நித்தியானந்தன்

காலம் மாறியே கடும் குளிராய்
காற்றுடன் பனி வேகமாய் கொட்ட
களிப்பில் சிறுவர்கள் சறுக்கி விளையாட
கனத்த மனதுடன் நானும் இரசிக்க

காலை வேலை கடுங்குளிரில் செல்ல
கைவிரலும் என்னை தாண்டியே போக
வழுக்கும் தெருவில் மெல்ல ஊர்ந்திட
வலுவாய் நானும் வந்து சேரவே

வெளியில் குளிரும் வீட்டில் வெக்கையாய்
வெந்த தணலில் உடம்பினை காச்சியே
இருமல் தடிமன் இரண்டும் சேர்ந்திட
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்றே

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading