நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஞாலத்தின் கோலம் 744

ஞாலத்தின் கோலம்
செல்வி நித்தியானந்தன்

காலம் மாறியே கடும் குளிராய்
காற்றுடன் பனி வேகமாய் கொட்ட
களிப்பில் சிறுவர்கள் சறுக்கி விளையாட
கனத்த மனதுடன் நானும் இரசிக்க

காலை வேலை கடுங்குளிரில் செல்ல
கைவிரலும் என்னை தாண்டியே போக
வழுக்கும் தெருவில் மெல்ல ஊர்ந்திட
வலுவாய் நானும் வந்து சேரவே

வெளியில் குளிரும் வீட்டில் வெக்கையாய்
வெந்த தணலில் உடம்பினை காச்சியே
இருமல் தடிமன் இரண்டும் சேர்ந்திட
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்றே

Author: