ஞாலத்தின் கோலம் 744

ஞாலத்தின் கோலம்
செல்வி நித்தியானந்தன்

காலம் மாறியே கடும் குளிராய்
காற்றுடன் பனி வேகமாய் கொட்ட
களிப்பில் சிறுவர்கள் சறுக்கி விளையாட
கனத்த மனதுடன் நானும் இரசிக்க

காலை வேலை கடுங்குளிரில் செல்ல
கைவிரலும் என்னை தாண்டியே போக
வழுக்கும் தெருவில் மெல்ல ஊர்ந்திட
வலுவாய் நானும் வந்து சேரவே

வெளியில் குளிரும் வீட்டில் வெக்கையாய்
வெந்த தணலில் உடம்பினை காச்சியே
இருமல் தடிமன் இரண்டும் சேர்ந்திட
இயற்கையின் கொடையில் இதுவும் ஒன்றே

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading