கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்

ராணி சம்பந்தர்

06.06.24
ஆக்கம் 319
தடமது படைத்தெழும் தனித்துவம்

தடமது படைத்தெழும் தனித்துவம்
குடமது நிறைத்துக் கூடிக் குலாவும்
ஊடகமது போற்றத்
தகுமே

27 ஆவது அகவைத்
தொடும் லண்டன் தமிழ்
வானொலியே மேலும்
வளர இனிதே மலர
உரிமைத்துவம் ஊற்று
எடுக்குமே

பேரும் புகழும் பூத்துச்
சிறப்பிக்கும் சிறுவர், இளையோர், முதியோர்
நிரப்பும் ஆக்கங்கள்
களையின்றி வலம் வந்து பறை சாற்றிடுமே

தமிழ் மொழித் தாக
உரமிட்டு மனம் நிறைவு
ஆக்கித் தலைமை இட்டுத் தட்டிக் கொடுத்து
ஊக்குவிக்கும் அதிபர்
நடா மோகன் , வாணி
மோகன், சங்கவி
வாழ்க வாழ்க வாழ்கவே

இத்தனை தூரம் வந்திடினும் இன்னுமின்னும் பல்லாண்டு காலம் பல்கிப் பெருகிப் பலரும்
நாடிட வாழ்க வளர்க என வாழ்த்திடுவோமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan