தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

சித்திரை வந்தாலே..!

சித்திரையில், சித்ரா பௌணர்மி, பந்தபாசம் தந்தது. பங்குனி கடந்து சென்றாய், வைகாசி முன்னர், சித்திரையாக பிறந்தாய்,
பன்னிரு மாதங்களில் சிறப்பாய் முப்பது தினங்கள் கொண்டாய். புது வருடம் பொங்கி வரும் ஆசிகள் தந்தாய்.
சித்திரை கொண்டாட்ட விடுமுறைகள் தந்தாய். புத்தாடை அணிந்திட முன்னர், மருத்து நீராடச்சொல்லி பணித்தாய்..
ஆலய மணியோசை அழைத்திடும், ஆன்மாவும் சிந்தையில் லயித்திடும், பக்தி பரவசத்தில் தரிசனம், சக்தி கொடுக்கும் மகிமையது..
உறவுகள் கூடிடும், விருந்துகள் சிறந்திடும், எண்ணப்பறவைகள் பறந்திடும், வண்ணக்கோல ஆடைகள் அணிந்திடும்
வசந்த கால கோலங்கள், இசைந்த ஞான தீபங்கள், புதிய எண்ண உதயங்கள், சித்திரை பூம்பாவை பூத்தாரே..!

– தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

Nada Mohan
Author: Nada Mohan