மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக….07.06.2022
தலைப்பு !

“பழமை”
நெடுநாள் நட்புறவே
நெறிபிறழா அன்புறவே
வெடுக்கென என்னைநீ
விட்டுப்பிரிய பொறுக்கலையே //

ஓராண்டா ஈராண்டா
ஒன்றான நம்நட்பு
தோராயமின்றி ஆண்டான்டாய்
தோன்றியதே நீண்டகாலம் //

மாண்டாலும் மறையாத
மாண்புடை புகழரசி
ஆண்ட வாழ்விற்கு
அர்த்தம்நீயன்றோ //

தொன்மை உறவின்
தோழமை நட்பு
மென்மை மக்கள்
மேன்மக்கள் மேன்மக்களே //

முதன்மை வித்தே
முத்தான சொத்தே
முத்தமிழ் தாயின்
முத்திரை நீயன்றோ //

கவிப் பார்வை …தொகுப்பாளர்
கவிஞர் பாவை அண்ணா அவர்களுக்கும்
அதிபர் அவர்களுக்கும் என்மனமார்ந்த
நனிநன்றிகள்🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading