நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பிற்காய்
சிவமணி புவனேஸ்வரன்.
தலைப்பு
*ஆறுமோ ஆவல்*

கூறும்பல் மொழிகளில் குன்றெனத் திகழ்வளர்
குவலயத் தமிழ்மொழியே

சாறெனப் பழச்சுவை சாற்றிட இனித்திடும்
சங்கத்தமிழ் அணங்கே

ஊறும் உணர்வினில் உள்ளத்தில் உதித்துமே
உண்மைகள் சொன்னவளே

பேறென வாய்த்துமே பெருமகிழ்வு ஊட்டியே
பேதையெனை ஈர்த்தவளே

தேறிட என்மனம் தேற்றிடும் வகையினில்
தேடிட அணைந்தவளே

மாறிடும் உலகினில் மாற்றங்கள் இன்றியே
மாண்பினில் காத்தவளே

வீறுகள் கொண்டுமே வீழ்ந்திடா வண்ணமே
விந்தைகள் புரிபவளே

ஆறுமோ ஆவலும் அறிந்திட உன்னையே
ஆற்றுவாய் அன்னையே

Nada Mohan
Author: Nada Mohan