சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

திரேஸ் மரியதாஸ்

உருமாறும் புதிய கோலங்கள்
உயிர்வாழும்வரை உருமாறிய
கோரங்களாயே கோலங்கள்
விரிகின்றது விந்தையாய்
சிந்தையை மந்தையாக்கி

கோவித்தாய் உற்பவித்தநீ
கோபங்கொண்டா மாறினாய்
டெல்ராவாய்
வாயைமூடு கையைக்கழுவுவென
கடூரமாயிருந்தும் கடுகளவேனும்
கனியவில்லை மனிதமனம்
புனிதமாக

வந்தேன் ஒமிக்ரோனாய்
தள்ளியே நிற்கிறாய் நீ
தர்மத்தைக் காக்காது
தனக்கெனவா வாழப்போகிறாய்
தரணியிலெனவா மீண்டுமோர்
பீரூவாய்

கணக்கு
விஞ்ஞானமெல்லாங் கலந்து
அஞ்ஞாதவாசமாக்கி ஆட்டுகிறாயே
பதின்னான்கு பத்து ஐந்துவென
அறைக்குள் பூட்டி சிறையாய்

கறைகள் எல்லாங்கழுவித் துறவாய்
வாழ்வைத் திறந்து உருவை மாற்றவா
உருமாற்றவைக்கிறாய் புதிய கோலமதை
பூமியில் வரைந்திடப் புதிய புள்ளிபோட்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading