சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

திரேஸ் மரியதாஸ்

உருமாறும் புதிய கோலங்கள்
உயிர்வாழும்வரை உருமாறிய
கோரங்களாயே கோலங்கள்
விரிகின்றது விந்தையாய்
சிந்தையை மந்தையாக்கி

கோவித்தாய் உற்பவித்தநீ
கோபங்கொண்டா மாறினாய்
டெல்ராவாய்
வாயைமூடு கையைக்கழுவுவென
கடூரமாயிருந்தும் கடுகளவேனும்
கனியவில்லை மனிதமனம்
புனிதமாக

வந்தேன் ஒமிக்ரோனாய்
தள்ளியே நிற்கிறாய் நீ
தர்மத்தைக் காக்காது
தனக்கெனவா வாழப்போகிறாய்
தரணியிலெனவா மீண்டுமோர்
பீரூவாய்

கணக்கு
விஞ்ஞானமெல்லாங் கலந்து
அஞ்ஞாதவாசமாக்கி ஆட்டுகிறாயே
பதின்னான்கு பத்து ஐந்துவென
அறைக்குள் பூட்டி சிறையாய்

கறைகள் எல்லாங்கழுவித் துறவாய்
வாழ்வைத் திறந்து உருவை மாற்றவா
உருமாற்றவைக்கிறாய் புதிய கோலமதை
பூமியில் வரைந்திடப் புதிய புள்ளிபோட்டு

Nada Mohan
Author: Nada Mohan