திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்

ஜெயம்
மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம்
கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும்
வண்ணமாய் மலர்கள் மலர்ந்து வீசிடும் சுகந்தம்
எண்ணில்லா சுகத்தை படைத்திடும் காட்சிகளின் விருந்தும்

எங்கும் பச்சை பசுமையென தரணியின் கோலம்
பொங்கும் உற்சாகத்துடன் உயிரினங்கள் வரவேற்றிடும் காலம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்பம் வாழ்க்கையில் மூளும்
மங்கிய மேனிக்குள் பிரகாசத்தை பாய்ச்சிடும் நாளும்

சூரியன் கண்திறந்ததைக் கண்டு மரங்களின் கொண்டாட்டம்
வேரினை ஆழமாய் ஊன்றி துளிர்விடுவதில் நாட்டம்
பாரின் அழகை வசந்தம் வந்தே கூட்டும்
தூரிகைகொண்டு அற்புத வண்ண ஓவியம் தீட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading