பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

துவாரகன் சாமினி

எட்டி உதைத்து
பிண்டம் கிழித்து
மண் தொடுகையில்
அன்னைக்கு ஓர் வலி

அவசர உலகில்
ஓடி ஓடி உழைத்து
ஆளாக்கப் பாடுபடும்
அப்பாக்களுக்கு பல வலி

பதினெட்டு வயது
பருவ மங்கைக்கு
வயசுக் கோளாற்றால்
காதல் வலி

வலி சுமந்த மண் விட்டு
கடல் கடந்து வந்தாலும்
தாய்நாட்டுப் பற்று
தீராத வலி

வலி வலி வலி
ஆண்டவன் வழங்கிய
அழிக்க முடியாத வரம்
வலி……..

– துவாரகன் சாமினி
10.09.2024

Nada Mohan
Author: Nada Mohan