“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

தொழிலாளர் தின வாழ்த்து

சிவருபன் சர்வேஸ்வரி
தொழிலாளர் தின வாழ்த்து

உதிரத்தை உழைப்பாக்கி உயர்வையும் தேடும் உழைக்கும் கரங்கள் வாழ்க
அதிகமாக முயற்சியும் ஆளுமையும் கொண்ட அதிதீகள் வாழி வாழி
வதிவிடம் உயர வளமான சமுகம் உருவாக தீவிரம் பேணும் தீர்கதர்சிகள் வளர்க
பதியாக வலுப்பெற்று உயிராக உரமூட்டும் உயர்ந்தவரே வாழ்க.
நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த நெற்றிக்கண்ணாய் கடமையிலே
நற்பணியில் நவின்று நிற்கும் நல்லவர்கள் வாழ்க.
ஏற்றிடும் போதிலே போற்றிடும் செயலிலே புகழ்சிந்தும் மன்னவர் வாழ்க
கண்ணியம் மேம்பிடவும் காலத்தில் சிறந்திடவும் வரப்புயர நிற்கும் வள்ளல்களே வாழ்க வாழ்க வாழ்கவே

Nada Mohan
Author: Nada Mohan