நகுலா சிவநாதன்

கொண்டாட்ட கோலங்கள்

வாழ்க்கையின் வழிமுறைகள்
வாழ்வின் வண்ணக் கோலங்கள்
தாழ்விலா வாழ்வுக்கு மகிழ்வின்
தன்னம்பிக்கை கொண்டாட்டங்கள்

தைபொங்கல் புத்தாண்டு தளிர்நடை
போட்டு வந்த கொண்டாட்ட கோலங்கள்
பகலவனின் உயிர்ரொளி பாருக்குப் பாச்சும்
பண்பாட்டு கோலங்கள் விழுமிய கொண்டாட்டம்

உறவுகளை இணைக்க
உணர்வுகளைப் பகிர்ந்திட
திறன்களை வெளிப்படுத்த
தித்திப்பாய் வாழ
கொண்டாட்ட மின்னல்கள்
கோலாக வைபவங்களே!

உழைத்த மனிதனுக்கு ஓய்வின் துளிகளும்
ஒய்யார எண்ணங்களும் களியாட்ட மனங்களும்
காசினினில் ஆட்டம் பாட்டம் ஆனந்தம்
அத்தனையும் உற்சாகம் தரும்
கொண்டாட்ட கோலங்களே!

நகுலா சிவநாதன்1646

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading