“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

நகுலா சிவநாதன்

துளி நீர்

கருமேகம் கனிந்து வார்க்கும்
களமேடும் குளிர்ந்து செழிக்கும்
துளி நீரும் சுமந்து வரும்
துணையாகும் வாழ்வின் வளம்

துளிர்க்கும் நீரும் பயிரை வளர்க்கும்
துாய்மை இளநீரும் தாகம் தணிக்கும்
தளிர்க்கும் மரமும் தண்மை அளிக்கும்
களிக்கும் காலமும் கனிவின் இனிமையே!

தாகத்தின் துளிநீரே! தர்மத்தின் வார்ப்பே
பாகமாய் உடலின் உயிர்வாழ பயனாவாய்
நாதமாய் கடல் சுமந்து வந்தாலும்
நன்மை வாழ்வின் நல்வரம் நீயே!

துளிநீரை வீணாக்காதே! என்றும்
துணையாக கொண்டு வாழ்க!

நகுலா சிவநாதன்1660

Nada Mohan
Author: Nada Mohan