பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

துளி நீர்

கருமேகம் கனிந்து வார்க்கும்
களமேடும் குளிர்ந்து செழிக்கும்
துளி நீரும் சுமந்து வரும்
துணையாகும் வாழ்வின் வளம்

துளிர்க்கும் நீரும் பயிரை வளர்க்கும்
துாய்மை இளநீரும் தாகம் தணிக்கும்
தளிர்க்கும் மரமும் தண்மை அளிக்கும்
களிக்கும் காலமும் கனிவின் இனிமையே!

தாகத்தின் துளிநீரே! தர்மத்தின் வார்ப்பே
பாகமாய் உடலின் உயிர்வாழ பயனாவாய்
நாதமாய் கடல் சுமந்து வந்தாலும்
நன்மை வாழ்வின் நல்வரம் நீயே!

துளிநீரை வீணாக்காதே! என்றும்
துணையாக கொண்டு வாழ்க!

நகுலா சிவநாதன்1660

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading