நகுலா சிவநாதன்

துளி நீர்

கருமேகம் கனிந்து வார்க்கும்
களமேடும் குளிர்ந்து செழிக்கும்
துளி நீரும் சுமந்து வரும்
துணையாகும் வாழ்வின் வளம்

துளிர்க்கும் நீரும் பயிரை வளர்க்கும்
துாய்மை இளநீரும் தாகம் தணிக்கும்
தளிர்க்கும் மரமும் தண்மை அளிக்கும்
களிக்கும் காலமும் கனிவின் இனிமையே!

தாகத்தின் துளிநீரே! தர்மத்தின் வார்ப்பே
பாகமாய் உடலின் உயிர்வாழ பயனாவாய்
நாதமாய் கடல் சுமந்து வந்தாலும்
நன்மை வாழ்வின் நல்வரம் நீயே!

துளிநீரை வீணாக்காதே! என்றும்
துணையாக கொண்டு வாழ்க!

நகுலா சிவநாதன்1660

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading