மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

உயிர்நேயம்

உயிரின் நேயம்
வலுவின் வாசம்
நிலத்தின் வாழ்வை
நிறுத்திடும் நேசம்

அறிவின் செதுக்கலில்
ஆழத்தின் பதியம்
அன்புடை நெஞ்சதில்
மிஞ்சிடும் வதனம்

காக்க வேண்டியது
உயிர் நேயம்
காத்து உதவுவது
அறிவுடை நெஞ்சு

உலகின் வறுமை
ஒழிப்பது கடனே!
உணவின் தேடல்
உறுதுணை ஆக்கும்

உதவும் கரங்கள்
உறுதுணையாகும்
உலகில் இதுவே
பெருந்துணையாகும்

நகுலா சிவநாதன் 1702

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading