நகுலா சிவநாதன்

உயிர்நேயம்

உயிரின் நேயம்
வலுவின் வாசம்
நிலத்தின் வாழ்வை
நிறுத்திடும் நேசம்

அறிவின் செதுக்கலில்
ஆழத்தின் பதியம்
அன்புடை நெஞ்சதில்
மிஞ்சிடும் வதனம்

காக்க வேண்டியது
உயிர் நேயம்
காத்து உதவுவது
அறிவுடை நெஞ்சு

உலகின் வறுமை
ஒழிப்பது கடனே!
உணவின் தேடல்
உறுதுணை ஆக்கும்

உதவும் கரங்கள்
உறுதுணையாகும்
உலகில் இதுவே
பெருந்துணையாகும்

நகுலா சிவநாதன் 1702

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading