நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலா சிவநாதன்

தொழிலாளி

உழைப்பின் உறுதியை
உன்னதமாய் மேற்கொண்டு
பிழைப்பின் மூலதனத்தை
பிறருக்கும் வழங்கும்
கொடையாளி தொழிலாளி

மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்த
மண்ணின் தொழிலாளி
மாபெரும் உழைப்பாளி

உழைப்பின் உன்னதம்
உலகம் உணரும் மூலதனம்
களைப்பை பார்க்காத
காலம் முழுதும் உழைக்கும்
நல்உழைப்பாளி தொழிலாளி

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan