கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நகுலா சிவநாதன்

பிரிவு துயர்

கவிதையில் முழக்கமிடும் பெண்ணிவள்
கனவாய் கருத்துகள் மொழியும்
புதுமையிலும் சொற்கள் நிழலாடும்
பூட்டிய பெ ண்களின் சீர்மைபேசும்
வதுவையாய் வண்ணத் தமிழ் நேசிப்பு
வாஞ்சையாய் கவிகளின் கோர்ப்பு
பதுமையாய் மறைந்த சோதரி கோசல்யா
பாரில் நினைக்கும் தருணமிது

தமிழின் பழமைச் சொற்கள் பலதும்
அணியும் இவள் கவிகள்
தினமும் பெண்ணியம் திகட்டா பேசும்
வனப்பும் வாழ்வும் முடங்கினாலும்
மனமும் நேசிப்பும் கவிதைக் கனலில்
மண்ணில் மடிந்தாலும் எண்ணத்தில்
நிழலாடும் இவள் கோசல்யா சகோதரி
நினைவில் என்றும் நீங்காநிழலாய்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading