தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

சுகந்தம் உண்டு

அனல் கக்கும் கோடையிலே
அவதியுண்டு ஆங்காங்கே
ஆன்றோர்கள் வாழ்வினிலே
அனுபவமும் சேர்ந்திருக்கும்

பிறைநுதலின் நெற்றியிலே
பொட்டிருக்கும்
பிற்போடும் கருமமும்
பின்னிற்கும் வாழ்வினிலே

திறனுடனே திறமையும்
தித்திப்பாய் சேர்ந்திருக்கும்
அறனதுவும் மறனதுவும்
அன்போடு கலந்திருக்கும்

வெற்றியுடன் தோல்வியும்
இணைந்திருக்கும்
வேறுபாடு தோன்றாத
வாழ்வினிலும் வளமிருக்கும்

வளமிருக்கும் வாழ்வினிலே
வசந்தம் உண்டு
வண்ணத் தமிழ் பாவினிலும்
சுகந்தம் உண்டு!

நகுலா சிவநாதன் 1678

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading