மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

சுகந்தம் உண்டு

அனல் கக்கும் கோடையிலே
அவதியுண்டு ஆங்காங்கே
ஆன்றோர்கள் வாழ்வினிலே
அனுபவமும் சேர்ந்திருக்கும்

பிறைநுதலின் நெற்றியிலே
பொட்டிருக்கும்
பிற்போடும் கருமமும்
பின்னிற்கும் வாழ்வினிலே

திறனுடனே திறமையும்
தித்திப்பாய் சேர்ந்திருக்கும்
அறனதுவும் மறனதுவும்
அன்போடு கலந்திருக்கும்

வெற்றியுடன் தோல்வியும்
இணைந்திருக்கும்
வேறுபாடு தோன்றாத
வாழ்வினிலும் வளமிருக்கும்

வளமிருக்கும் வாழ்வினிலே
வசந்தம் உண்டு
வண்ணத் தமிழ் பாவினிலும்
சுகந்தம் உண்டு!

நகுலா சிவநாதன் 1678

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading