புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நகுலா சிவநாதன்

ஒளியின்றி ஒளிர்வெங்கு

கதிரவன் ஒளியாலே கவலைகள் பறந்தோடும்
பதியதன் பெருமை யாவும்
பகல்போல நிலவாகும்
உதிரத்தின் உணர்வெல்லாம்
ஊற்றாக மிளிர்ந்திடும்
வதியுமிடம் வண்ணமாய் வளமுடனே
ஒளிர்வுபெறும்

நதிபோல ஒளிபரப்பு நாநிலமும் பரந்திட
கதியாக வெளிச்சமும் கண்களை மயக்கிடும்
ஒளியின்றி ஒளிர்வெங்கு நிலைக்கும்
மதியாலே மானிடமும் மங்காமல் ஒளிரும்

ஒளியின்றி ஒளிராது நம்வாழ்வு;
வழியின்றி வாழ்க்கையும் நகராது
பழியின்றி ;நம்பயணம் பாடுகளாய் நகர
வளியொன்று வேண்டுமே வளமான ஒளியாலே!

நகுலா சிவநாதன்1738

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading