சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நகைப்பானதோ மனிதநேயம்

செல்வி நித்தியானந்தன்
நகைப்பானதோ மனிதநேயம்

எள்ளியும் நகையாடியும்
எரிச்சல் பலஊட்டியும்
எப்டுத் திசையெங்கும்
எண்ணிலடங்கா துயரே

மனிதநேயம் மடிந்தும்
மண்ணுக்குள் புதைந்தும்
மனமதை கல்லாக்கியும்
மரமாகிய நேயமும்

பணத்தை சேமித்தும்
பலநாட்டில் தேக்கியும்
பற்பல அட்டூழியம்
பாரினில் நடந்தும்

பேரிடர் என்றதும்
பேணிய செல்வமும்
பெருஉதவி செய்ததும்
மெச்சுதே மனிதநேயம்

Author: