நகைப்பானதோ மனிதநேயம்

செல்வி நித்தியானந்தன்
நகைப்பானதோ மனிதநேயம்

எள்ளியும் நகையாடியும்
எரிச்சல் பலஊட்டியும்
எப்டுத் திசையெங்கும்
எண்ணிலடங்கா துயரே

மனிதநேயம் மடிந்தும்
மண்ணுக்குள் புதைந்தும்
மனமதை கல்லாக்கியும்
மரமாகிய நேயமும்

பணத்தை சேமித்தும்
பலநாட்டில் தேக்கியும்
பற்பல அட்டூழியம்
பாரினில் நடந்தும்

பேரிடர் என்றதும்
பேணிய செல்வமும்
பெருஉதவி செய்ததும்
மெச்சுதே மனிதநேயம்

Author:

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading