நகைப்பானதோ மனிதநேயம்

செல்வி நித்தியானந்தன்
நகைப்பானதோ மனிதநேயம்

எள்ளியும் நகையாடியும்
எரிச்சல் பலஊட்டியும்
எப்டுத் திசையெங்கும்
எண்ணிலடங்கா துயரே

மனிதநேயம் மடிந்தும்
மண்ணுக்குள் புதைந்தும்
மனமதை கல்லாக்கியும்
மரமாகிய நேயமும்

பணத்தை சேமித்தும்
பலநாட்டில் தேக்கியும்
பற்பல அட்டூழியம்
பாரினில் நடந்தும்

பேரிடர் என்றதும்
பேணிய செல்வமும்
பெருஉதவி செய்ததும்
மெச்சுதே மனிதநேயம்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading