மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……..

ரஜனி அன்ரன்

நினைப்பதெல்லாம்…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025

நினைவென்ற ஒன்று இல்லாவிடில்
கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை
கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட
நினைவு மட்டுமே நமக்காகிட
நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அதிசயமே அதிசயம் தான்
ஆச்சரியம் பூச்சொரிய
ஆகாயம் குடை விரிக்கும் !

எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக
வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க
நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால்
வாழ்க்கைப் பாதையும் மாறிட
வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே !

நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும்
கறை படிந்த மனசுகளும் கலகலக்கும்
நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும்
நீல வானத்தையும் தொட்டிடலாம்
கால நதியினிலும் நீந்திடலாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading